நடிகை ரம்யா கிருஷ்ணனை கவுரவித்த துபாய் அரசு - குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல குணசித்திர நடிகை வலம் வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி ஐக்கிய அரவு அமீரகம் கவுரவப்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, ஆண்ட்ரியா, நாசர் ஆகியோர் இந்த விசாவை பெற்றனர்.
இந்த ‘கோல்டன் விசா’ என்பது, நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும். இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை இந்த விசா மூலம் நாம் துபாய்க்கு சென்று வரலாம். மேலும், இந்த விசாவை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இந்த ‘கோல்டன் விசா’வை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.