ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மக்கள்

Rameswaram
By Nandhini Aug 12, 2022 09:08 AM GMT
Report

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திடீரென உள்வாங்கிய கடல் 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், மீனவர்களுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வரும் சுற்றலா பயணிகள் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டுச் செல்கின்றனர்.   

Rameswara Sea

Rameswara Sea