செஸ் ஒலிம்பியாட் போட்டி - தமிழக வீரர் பிரக்ஞானந்தா போட்டி டிரா
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா போட்டி டிரா
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் இத்தாலி அணி வீரருடன் மோதிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இத்தாலி வீரர் லொரென்சோ உடன், பிரக்ஞானந்தா களமிறங்கிய போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 42வது நகர்த்தலில் போட்டியை டிரா செய்தார்.