மனைவியர் தினம் ஒன்று வேண்டும் : இணை அமைச்சர் கோரிக்கை

By Irumporai May 16, 2022 06:35 AM GMT
Report

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சியின்  தலைவராக உள்ளார் கடந்த  10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள ராம்தாஸ் அத்வாலே  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராக  உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது :

தாய் நம்மைப் பெற்று நமக்கு வாழ்க்கையை உருவாக்கி தந்தார். அந்த வாழ்க்கைக்கு துணையாக மனைவி முக்கியமான காலகட்டத்தில் வருகிறார். நமது நல்லது, கெட்டது என அனைத்திலும் மனைவி உள்ளனர்.

ஒவ்வோா் ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாா் என கூறுவார்கள். இங்கு பெரும்பாலானவா்களுக்கு அந்த நபா் மனைவியாகத்தான் இருப்பார்.

எனவே மனைவியா் தினமும் கொண்டாடப்பட வேண்டும். இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மனைவிக்கு நன்றி பாராட்டும் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.