அதை touch பண்ண பிடிக்காது ஆனா...1/2 மணி நேரத்துக்கு ஒரு வாட்டி..!! கணவர் பத்தி ஓப்பனாக ரம்பா..!

Rambha Tamil Cinema
By Karthick Jan 11, 2024 08:24 AM GMT
Report

நடிகை ரம்பா முதல்முறையாக தனது கணவருடன் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரம்பா

90-களில் தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவின் கனவு கன்னியாக வளம் வந்தவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்து நடித்து எண்ணற்ற தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை பெரும்பாலும் கவர்ந்தவர் ரம்பா.

rambha-talks-about-her-husband-in-interview

கடந்த, 2010-ஆம் ஆண்டு இந்திரகுமார் என்ற இலங்கை தமிழ் தொழிலதிபரை மணந்து கொண்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகின்றார். கனடா நாட்டில் வசித்து வரும் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. பெரும்பாலும், மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வரும் ரம்பா. அண்மையில் தனது கணவருடன் அளித்துள்ள பேட்டி பெரும் வைரலாகி வருகின்றது.

அரை மணி நேரத்திற்கு போன்..

அதில், எப்போதும் பிசினஸ் செய்பவர்கள் பிஸியாக இருக்கும் சூழலில், இவர் அரை மணி நேரத்திற்க்கு ஒரு முறை தனக்கு போன் செய்து நலம் விசாரிப்பார் என்று குறிப்பிட்டு,

rambha-talks-about-her-husband-in-interview

சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கணவர் கிடைப்பது கஷ்டமான விஷயமென்று குறிப்பிட்டு ஆனால், இந்திரகுமார் தனக்கு கிடைத்தது தனது பாக்கியம் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதே போல தனக்கு வீட்டில் கிட்சன் பொருள்களை யாராவது touch பண்ண பிடிக்கவே பிடிக்காது என்றும் ரம்பா கூறியுள்ளார்.