வன்னியர்களால் அதிமுக வந்தார்கள் என இருக்க வேண்டும் - ராமதாஸ் ட்வீட்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையினை அறிவிப்பதாக கூறி உள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
இந்த நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்து, தனது தந்தை இராமதாசுடன் போனில் தொடர்பு கொண்டு அன்புமணி ராமதாஸ்.அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த நிலையில் பாமாக நிறுவனர் ராமதாஸ் தனது ட்வீட்டர் பதிவில் , வன்னியர்களுக்கு இட பங்க்கீடு கொடுத்தார்கள்அதனால் மீண்டும் ஆட்சிக்கு அதிமுக வந்தார்கள், என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 27, 2021
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!#TNElections2021