பாலுவின் பதவியை பறித்த ராமதாஸ்; பாமக பொதுக்குழு - அன்புமணி அறிவிப்பு
பாமக முக்கிய நிர்வாகி பாலு நீக்கப்பட்டு, வி.எஸ்.கோபு நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலு நீக்கம்
பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி வந்தாலும், அன்புமணி ஒரு புறம் நீக்கத்தை ரத்து செய்து பழைய நிர்வாகிகளே நீடிப்பார் என அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே 35 மாவட்ட செயலாளர்கள், 16 மாவட்ட தலைவர்கள், பொருளாளார் ஒருவர் நீக்கப்பட்டு இருந்த நிலையில், பாமகவின் முக்கிய நிர்வாகியான வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த பாலுவையும் நீக்கம் செய்யப்பட்டு வழக்கறிஞர் வி. எஸ் கோபுவினை நியமனம் செய்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
இதற்கிடையில், பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அன்புமணி அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவானது, முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கட்சியின் லெட்டர் பேடில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்றும், தலைவர் அன்புமணி என்றும் இடம்பெற்றுள்ளதோடு, பாமகவின் தலைமை நிலைய அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.