மேடையில் திடீரென தேம்பி தேம்பி அழுத ராமதாஸ்..!

Paataali Makkal Katchi Dr. S. Ramadoss Tamil nadu
By Thahir Jul 26, 2022 07:05 AM GMT
Report

விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் திடீரென தேம்பி தேம்பி அழுதார்.

கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ் 

விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டம் நடைபெற்றுள்ளது.அப்போது தான் எழுதிய கவிதையை வாசிப்பதாக கட்சி தொண்டர்களிடம் கூறி வாசித்தார்.

மேடையில் திடீரென தேம்பி தேம்பி அழுத ராமதாஸ்..! | Ramadas Suddenly Burst Into Tears On The Stage

அப்போது அவர் பேசுகையில், என்ன தவம் செய்தேனோ.. இமமண்ணில் நான் பிறக்க..

ஏது தவம் செய்தேனோ இன்று உங்களோடு நான் இருக்க...

என்ன தவம் செய்தேனோ..இம்மண்ணில் என் ஊரில் இன்று நான் கால் பதிக்க...

என்ன தவம் செய்தேனோ எம் மக்காள் இன்று உங்களோடு நான் இருக்க..

முந்தி தவம் இருந்து முண்ணுாறு நாள் சுமந்து என்னை ஈன்றெடுத்த என் நவநீதம் தாயே..

எனக்கு ஒரு வரம் தருவாய் எழுப்பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க அருள் புரிவாய் என்று வாசிக்கும் போது தேம்பி அழுதார்.

என்னையும் தாயும் மகிழந்து குழாவி வாழந்த சிற்றுாரில் எண்ணுாரில் யான் பிறக்க என்ன தவம் செய்தேனோ..நான் என்ன தவம் செய்தேனோ என நா தழு தழுக்க கூறி கண்ணீர் சிந்தினார்.