அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வாழ்த்து!

Cricket Uttar Pradesh Ayodhya Ayodhya Ram Mandir
By Jiyath Jan 22, 2024 03:45 AM GMT
Report

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கேஷவ் மகாராஜ்

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வாழ்த்து! | Ram Mandir Cricketer Keshav Maharaj Greetings

இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேஷவ் மகாராஜின் முன்னோர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 1874-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்காக சென்ற அவர்கள் அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர்.

வாழ்த்து 

கேஷவ் மகாராஜ் இந்து சமய பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் "அனைவருக்கும் வணக்கம். அயோத்தியில் ராமர் கோயில் நாளை திறக்கப்படவுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வாழ்த்து! | Ram Mandir Cricketer Keshav Maharaj Greetings

இதையொட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இந்து சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு அமைதியையும், நல்லிணக்கத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்தட்டும். ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறியுள்ளார்.