பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?
சர்ச்சைப் பதிவு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய ஒரு பதிவு செய்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி என்றால் பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்? என்ற கேள்வியை அவர் அந்த பதிவில் எழுப்பினார்.
வழக்குப் பதிவு
அந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால், பெரும் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உத்தரப் பிரதேச மாநில காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.