2-வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை ரஷிதா? - தீயாய் பரவும் தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
ரக்ஷிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரட்சிதா.
இவர் ‘உப்புக் கருவாடு’ திரைப்படத்தில் 2015ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரட்சிதா.
கணவருடன் மோதல்
ரட்சிதா, சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை கடந்த 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 9 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
குடும்பம் , சீரியல் என ரொம்ப பிஸியாக இருந்த ரக்ஷிதா, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இருவரையும் சமாதானப்படுத்த இரு வீட்டாரும் முயன்ற போதும் இருவரும் சமாதானம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை என்னும் தொடரில் நடித்து வருகிறார்.
2-வது திருமணம்?
இந்நிலையில், நடிகை ரச்சிதா விரைவில் 2வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஒருவரை ரக்ஷிதா காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை 2வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.