போதை மருந்து கொடுத்து "அந்த" மாதிரி வீடியோ எடுத்தார்..பாலிவுட் நடிகை மீது கணவர் பரபரப்பு புகார்

Karthick
in பிரபலங்கள்Report this article
தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தது மிரட்டியது மட்டுமின்றி தன்னை ஓரினசேர்க்கையாளராக சித்தரித்தார் என நடிகை ராக்கி சாவந்த் மீது கணவர் புகார்களை அளித்துள்ளார்.
நடிகை ராக்கி சாவந்த்
கடந்த 1997-ஆம் ஆண்டு பாலிவுட் திரையில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் ராக்கி சாவந்த். 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங்என்பவரை மணந்து 2 ஆண்டிற்குள் அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.
பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு தன்னை விட 11 வயது குறைந்த அடில்கான் துரானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மாற்றி மாற்றி புகார்
இந்நிலையில், இருவருக்கும் திருமண சில மாதங்களிலேயே தன் கணவர் தன்னை துன்புறுத்துவதாக நடிகை ராக்கி சாவந்த் பகிரங்க புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்போது தன்னை தன்னை கணவர் அடில்கான் நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் சம்பாதித்தாகவும் அவர் புகார் அளித்தார்.
இந்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவரின் கணவர் அடில்கான் துரானி ராக்கி சாவந்த் மீது புகார் அளித்திருக்கிறார். அவர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், தன்னை திருமணம் செய்த போதும் ராக்கி சாவந்த் முன்னாள் கணவருடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அந்த விஷயம் தெரிந்தவுடன் தான் விவாகரத்து கேட்டதாக கூறினார்.
மேலும், ராக்கி சாவந்த் தனக்கு போதை மருந்து அளித்து அப்போது தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தது மட்டுமின்றி அதனை வைத்து அவர் தன்னை ஓரினசேர்க்கையாளாராக சித்தரித்து தனது வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.