டிராமா பண்ணாதீங்க.. கடுப்பான சபாநாயகர் - திரிணாமுல் எம்.பி அதிரடி சஸ்பெண்ட்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திரிணாமுல் எம்.பியை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டுதொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அது தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடந்து வருகிறது. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 13 நாட்களாக முடங்கியது. மேலும், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது, இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. கடுப்பான
சபாநாயகர்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான டெரிக் ஓ பிரையன் மத்திய அரசு ஜனநாயகத்தை சிதைப்பதாகத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் இப்போது நிறைவேற்றப்படும் மசோதாக்களில் மூன்றில் ஒரு பங்கு கூட்டாட்சிக்கு எதிராகவே இருப்பதாகவும் அவர் பேசினார்.
அப்பொழுது சபாநாயகர் தன்கர் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குறித்து மட்டுமே பேசுமாறு கூறினார். அப்பொழுதும் அவர் பேச்சை தொடர்ந்தார், அதனால் கடுப்பான சபாநாயகர், "இதுவே உங்களுக்கு பேஷனாகிவிட்டது, தொடர்ந்து இப்படிச் செய்கிறீர்கள். வெளியுலகில் விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்.
இங்கு என்ன டிராமா செய்யவா வந்தீர்கள். இதற்காகவே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள், முதலில் உட்காருங்கள், இப்படியெல்லாம் செய்து பலன் தராது" என்று கூறினார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி அநாகரிகமாக பேசுவதாக கூட்டத்தொடரில் இருந்து சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.