ரொம்ப நாளைக்கு பிறகு நண்பனை சந்தித்தேன் : ரஜினிகாந்த் ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
நண்பனை சந்தித்தது மகிழ்ச்சி
அப்போது சந்திரபாபு நாயுடு அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றுள்ளார்.மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டதாக கூறப்படுகின்றது.
ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் நீண்ட நாட்கள் கழித்து தனது நெருங்கி நண்பரை சந்தித்ததாகவும், அவருக்கு நல்ல உடல் நலனும், சிறந்த அரசியல் வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
After a long time..I met my dear friend and respected Chandrababu Naidu garu and spent memorable time ..I wished him good health and great success in his political life. @ncbn pic.twitter.com/shIoKLROz4
— Rajinikanth (@rajinikanth) January 10, 2023
அதேபோல் சந்திரபாபு நாயுடு , என் அன்பு நண்பர் தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளளார்.