மீண்டும் தாத்தாவாகிறார் நடிகர் ரஜினி! ஹேப்பி நியூஸ் சொன்ன மகள்!
அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது மகள் ஹேப்பி நியூஸ் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் இரண்டாவது மகளான சவுந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு வேத் என்ற மகன் பிறந்த நிலையில் 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து மகனோடு வசித்து வந்த சவுந்தர்யாவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது சவுந்தர்யா கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வந்த தந்தைக்கு இந்த ஹேப்பி நீயூசை தெரியப்படுத்தியுள்ளார். இந்த செய்தியை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.