ஐஸ்வர்யா 'அவருடன்' நெருக்கமாக பழகி வருவது ரஜினிக்கே நெருடலாக இருக்கிறதாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் அறிவிப்பு திரைவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என இதுவரை அறியப்படாத நிலையில் இணையத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. அதன்படி தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமாக, தனுஷின் நெருங்கிய நட்பு வட்டாரம் தான் என கூறப்படுகிறது.
சில நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகுவது மனைவியான ஐஸ்வர்யாவிற்கு பிடிக்கவில்லை எனவும் அதனால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ஐஸ்வர்யா மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வைகப்பட்டது.
ஐஸ்வர்யாவை விட 10 வயது குறைந்த அவரின் மாமா மகனான அனிருத்துடன் சிறு வயதில் இருந்தே நெருங்கி பழகி வருகிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இவர்களின் இந்த உறவு தனுஷிற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் அனிருத்துடன் இரவு நேரத்தில் ஒன்றாக ஐஸ்வர்யா ஊர் சுற்றியிருக்கிறார். தனுஷை வெறுப்பேற்ற தான் அவர் இவ்வாறு நடந்துக்கொள்கிறார் என பேசப்படுகிறது.
இதனை தொடர்ந்து அனிருத்துடன் ஐஸ்வர்யா நெருக்கமாக பழகி வருவது தந்தை ரஜினிகாந்திற்கே பிடிக்கவில்லையாம்.
என்னதான் மாமா மகனாக இருந்தாலும் கணவன் மனைவி பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் கணவருக்கு பிடிக்காத இந்த உறவை தவிர்ப்பது நல்லது தானே என தலைவர் கூறுகிறாராம்.