மன உளைச்சலில் இருந்த ரஜினி..குட்நியூஸ் சொன்ன மகள் - மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா குடும்பம்!
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.
சவுந்தர்யா
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குனர்கள் ஆவர். இதில் ஐஸ்வர்யா, ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் சவுந்தர்யா ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதேபோல் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.
குட் நியூஸ்
இருவருக்குமே திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. ஏனெனில் இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யாவின் முடிவால் மிகுந்த மன வருத்ததில் இருந்த ரஜினிக்கு ஆறுதல் தரும் விதமாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் செளந்தர்யா.
அது என்னவென்றால் அவர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளாராம். இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
மகிழ்ச்சியில் ரஜினி
விசாகனுடன் திருமணமான பின் அவருக்கு பிறக்க உள்ள முதல் குழந்தை என்பதால் ரஜினி குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம். இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் செளந்தர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்