மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பா? ஆளுநருடன் சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.
அப்போது பேசிய அவர், ஆளுநருடன் 30 நிமிடங்கள் பேசியதாக தெரிவித்தார். அப்போது தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, தமிழர்களின் கடின உழைப்பு. அவர்களின் கொள்கை பிடித்திருப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக பேசினார்.
தமிழ்நாட்டிற்கு தன்னால் முடிந்த அளவுக்கு நல்லது செய்ய தயாராக இருப்பதாக ஆளுநர் என்னிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் ஆளுநர் உடனான சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசியதாக கூறினார். அப்போது செய்தியாளர்கள் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கா ? என கேள்வி எழுப்பியதற்கு இல்லை என்றார்.
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.