நினைச்சதே தப்பு; அண்ணாமலை முதல்வரா? ரஜினிக்கே அது தெரியாது - சாடிய எஸ்.வி சேகர்
குருமூர்த்தி பேசியது பற்றி எஸ்.வி. சேகர் விமர்சனம் வைத்துள்ளார்.
குருமூர்த்தி தகவல்
துக்ளக் இதழின் 54ஆம் ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக வர வேண்டும் என நினைத்தார். அப்போது அவர் என்னிடம் 'நான் முதலமைச்சராக வரமாட்டேன்' என்று கூறினார்.
எஸ்.வி. சேகர் விமர்சனம்
'நீங்களே முதலமைச்சராக வரவில்லை என்றால் வேறு யார் வருவார்கள்?' என நான் கேட்டேன் அப்போதுதான் அண்ணாமலை என்று ஒருவர் இருப்பதை பற்றி கூறினார் எனப் பேசியிருந்தார். தற்போது இதுகுறித்து பதிவிட்டுள்ள எஸ்.வி.சேகர், அப்படி நினைச்சதே பெரிய தப்பு.
நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்பு்வார்.
இந்த விஷயம் ரஜினிக்கு கூட தெரியாது. ஏப்ரல் 1ம்தேதி சொல்லணும்னு நினைச்சேன். அன்னிக்கு ஹால் கிடைக்கலை அதான் இன்னிக்கு சொல்றேன். சோ உடன் யாரையும் ஒப்பிடமுடியாது! சோ வின் நாற்காலியில் அமர்ந்திருப்பதே ஒருவரை சோ வாக மாற்றிவிடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.