அகமதாபாத் விமான விபத்து தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் கவலை
அகமதாபாத் விமான விபத்து தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் கவலை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் கவலை
கூலி திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி திரைக்கு வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், “ஜெயிலர் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார்.
அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்த ரஜினிகாந்த், “விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்..” என கவலையாக பேசிச் சென்றுள்ளார்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
