அரசியல் நிலைப்பாடு இனி இது தான்...ரஜினி அண்ணன் பரபரப்பு பேட்டி
நாடளுமன்ற தேர்தல் மட்டுமின்றி இனி வரும் எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தர மாட்டார் என அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல்
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்து கொண்டே இருந்தார். அவ்வப்போது, தேர்தல்களில் சில கட்சிகளுக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படையாக கூறிய அவர், தானே தனியாக அரசியல் கட்சி துவங்கி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி, பின்னர் அவரது உடல்நலம் ஒத்துழைக்காத நிலையில், பின்னர் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.
ரஜினியின் இந்த முடிவு இறுதியானது என்றாலும், அவரை அவ்வப்போது அரசியலுக்கு சிலர் பயன்படுத்திறார்கள் என்ற கருத்துக்கள் நிலவி கொண்டே வருகிறது. அண்மையில், உத்திரபிரதேச மாநிலத்தில் பல அரசியல் தலைவர்களை சந்தித்த ரஜினி, மீண்டும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
சத்திய நாராயணராவ் பதில்
இந்நிலையில், சந்திரயான் - 3 திட்ட இயக்குநரின் வீரமுத்துவேலுவின் பெற்றோரை சந்தித்த ரஜினிகாந்தின் சத்திய நாராயணராவ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜெயிலர்" படத்தை மக்கள் அனைவரும் சென்று ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என குறிப்பிட்டு, அதற்கு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தனது நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அவரிடம் ரஜினிகாந்திடம் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பட்டபோது, வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, இனி எந்த தேர்தலிலும் நடிகர் ரஜினி யாருக்கும் தனது ஆதரவை அளிக்கமாட்டார் என அழுத்தமாக குறிப்பிட்டார். ரஜினி காலில் விழுந்த சம்பவம் குறித்து பேசிய அவர், ஆரம்பத்திலிருந்து யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவது ரஜினியின் பழக்கம் தான் குறிப்பிட்டு சென்றார்.