ரஜினிக்கு சொந்தமான நிலத்தை ஒப்படைத்தார் முன்னாள் மக்கள் மன்ற நிர்வாகி!
நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோருக்காக வாங்கப்பட்ட நிலத்தை பராமரித்து வந்த முன்னாள் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் KVS.சீனிவாசன் இன்று ஸ்ரீ ராகவேந்திர பொதுநல அறக்கட்டளை முதன்மை நிர்வாகியும்,ரஜினிகாந்தின் சகோதரருமான சத்யநாராயண கெய்க்வாட் அவரிடம் ஒப்படைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினி ரசிகர் மன்றமாக மாற்றியமைத்தார்.இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து ரஜினிகாந்த் தனது பெற்றோர்களுக்கு நினைவகம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தினை 12 ஆண்டுகளாக பராமரித்து வந்தார் KVS.சீனிவாசன்.மன்றத்தில் இருந்து விலகியதால் விரைவில் நிலத்தினை ஒப்படைப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது சகோதரரிடம் நிலத்தினை ஒப்படைத்து முழுவதுமாக ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்.