தனுஷ் - ரஜினி விவகாரத்தில் திடீர் திருப்பம் : ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்
நடிகர் தனுஷ் - ரஜினிகாந்த் இடையேயான உறவில் சுமூகமான திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.
இருவரையும் இணைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேசமயம் ரஜினியும் தன் பங்கிற்கு தனுஷிடம் சமாதானம் பேசியதாக கூறப்பட்டது. மேலும் தனுஷிடம் அவரது மூத்த மகன் யாத்ராவை அனுப்பி பேச வைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் தனுஷின் சிபாரிசு ஒன்றை ரஜினி ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் ரஜினியின் 170 படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்துக்கு பால்கி கதை கூற தனுஷ்தான் ஏற்பாடு செய்ததாகவும், அவரின் சிபாரிசை ரஜினி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி வருவதாக கூறப்படுகிறது.