ஆசிரியையுடன் காதலால் தப்பி ஓடிய மாணவி - கதறி நிற்கும் குடும்பம்!
தன் பாலின ஈர்ப்பில் ஆசிரியையுடன் காணாமல் போன மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
தன் பாலின ஈர்ப்பு
ராஜஸ்தான், புகானிரில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணையில், மாணவி காணாமல் போன அதே நாளில் ஆசிரியையும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.
இதனால் பெற்றோர் மாணவி அந்த ஆசிரியை லவ் ஜிகாத் செய்திருப்பதாக குற்றம்சாட்டினர். அதனைத் தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சிகள் போராட்டமும் நடத்தினர். இதற்கிடையில், ஆசிரியர் வீட்டிலும் அவரை காணவில்லை என புகாரளித்தனர்.
மாணவி மீட்பு
இதற்கிடையில், ஆசிரியையும், மாணவியும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், நாங்கள் தன்பாலின் ஈர்ப்பு உடையவர்கள் எனவும் இருவரும் பரஸ்பரம் சம்மதத்துடனே குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.
தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, இருவரும் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
