தொடரும் அரசியல் சஸ்பென்ஸ்...திடீரென மாற்றப்பட்ட ராஜஸ்தான் தேர்தல் தேதி!!
நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டத்தில் இருந்து திடீரென மாற்றப்பட்டுள்ளது.
5 சட்டமன்ற தேர்தல்
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னால், நாட்டின் 5 மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ், பாஜகவிற்கு இந்த தேர்தல் மிக பெரிய சவாலாக பார்க்கப்படும் நிலையில், அவற்றில் கணிசமான வெற்றியை பதிவு செய்திட இரண்டு கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்களது இருப்பை கட்டி கொள்ள பெரும் முயற்சியை தற்போதிலிருந்தே எடுக்க துவங்கிவிட்டன.
மாற்றப்பட்ட தேர்தல் தேதி
இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு வரும் டிசம்பர் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என சில தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது திடீரென இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது.
23-ஆம் தேதிக்கு பதிலாக 25-ஆம் தேதிக்கு அம்மாநிலத்தின் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான அறிக்கை வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நவம்பர் 6-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என்றும் முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.