இன்னும் 5 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் மழை ஓயாது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Tamil nadu TN Weather Regional Meteorological Centre
By Vinothini Jul 14, 2023 10:18 AM GMT
Report

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, ஜூலை 13-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

rainfall-report-by-meteorological-centre

தொடர்ந்து, ஜூலை 16-ம் தேதி தொடங்கி 20-வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 மாவட்டங்கள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

rainfall-report-by-meteorological-centre

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.