ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் - அமைச்சர் உறுதி

Kanchipuram Indian Railways
By Sumathi Jun 27, 2025 01:30 PM GMT
Report

ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என அமைச்சர் சோமன்னா தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டணம்

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமன்னா, ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் வருகை தந்தார். இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் வரை தனி ரயில் மூலமாக வந்தடைந்தார்.

ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் - அமைச்சர் உறுதி | Railways Ticket Fair Hike Says Minister Somanna

அப்போது காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அந்த நேரத்தில் புதியதாக இந்திரா நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்துக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நேரடியாக சென்று அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

UPI முதல் ஏடிஎம் கட்டணம் வரை - ஜூலை 1 முதல் அமலுக்கு வரப்போகும் மாற்றங்கள்

UPI முதல் ஏடிஎம் கட்டணம் வரை - ஜூலை 1 முதல் அமலுக்கு வரப்போகும் மாற்றங்கள்

அமைச்சர் தகவல்

தொடர்ந்து இதுதொடர்பாக கருத்து கேட்டு பரிசீலனை செய்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை செய்து தருவதாக உறுதியளித்தார். பின் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

minister somanna

அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரயில்வே கட்டணம் மக்களை பாதிக்காதவகையில் படிப்படியாக உயர்த்தப்படும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரயில்வே நிலையம் அமைக்க ஆலோசனை பரிசீலனை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.