முன்பதிவு டிக்கெட்களுக்கான புதிய அறிவிப்பு - ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்

Indian Railways
By Sumathi Jun 30, 2025 07:33 AM GMT
Report

முன்பதிவு டிக்கெட்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

முன்பதிவு டிக்கெட்

ரயிலில் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து செய்யும் வசதி உள்ளது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் இறுதி அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது.

முன்பதிவு டிக்கெட்களுக்கான புதிய அறிவிப்பு - ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ் | Railway Reservation Prepare 8 Hours Before Details

இதனால் காத்திருப்போர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் இடம் கிடைக்காத பயணிகள் சிக்கலுக்குள்ளாகின்றனர். இதனைத் தொடர்ந்து ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியது.

ரயில் கட்டணத்தை உயர்த்தப்போகும் ரயில்வே? பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

ரயில் கட்டணத்தை உயர்த்தப்போகும் ரயில்வே? பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

ரயில்வே திட்டம்

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் பணியை படிப்படியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

முன்பதிவு டிக்கெட்களுக்கான புதிய அறிவிப்பு - ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ் | Railway Reservation Prepare 8 Hours Before Details

மேலும் பகலில் 2 மணிக்கு முன்பாகவே புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு இறுதி அட்டவணை முந்தைய நாள் இரவு 9 மணிக்கே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகளே முன்பதிவு செய்ய முடியும் நிலையில், அதனை ஒன்றரை லட்ச ரூபாயாக அதிகரிக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.