விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்ட ராகுல் காந்தி !

Indian National Congress Rahul Gandhi
By Jiyath Jul 08, 2023 01:57 PM GMT
Report

வயல்வெளியில் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டு மகிழ்ந்தார் ராகுல் காந்தி.

சுற்றுப்பயணம்

மக்களவைத் தெரிதல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களை நேரில் சந்தித்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறர். பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ராகுல் காந்தி அதன் ஒரு பகுதியாக இன்று டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவுக்கு காரில் சென்றார்.

வயலில் நாற்று நட்ட ராகுல்

அப்போது ஹரியானா சென்ற அவர் வழியில் உள்ள சோனிபட் மாவட்டத்தில் விவசாயிகள் நாற்று நடுவதைப் பார்த்து காரை உடனடியாக நிறுத்தக்கோரி இறங்கினார். அங்கு சாலை ஓரத்தில்  நாற்று நடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளுடன் சேர்ந்து நாற்றுகளை நடவு செய்தார் ராகுல் காந்தி. அதனை தொடர்ந்து டிராக்டர் மூலம் வயல்வெளியை உழுதும் மகிழ்ந்தார்.

விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்ட ராகுல் காந்தி ! | Rahul In Hari Peoples 87

பின்னர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் தந்த உணவைச் சாப்பிட்டு சென்றார்.  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ராகுல் காந்தி செய்த இந்த செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது.  இது பற்றிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.