ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை : ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Rahul Gandhi
By Irumporai Mar 23, 2023 07:40 AM GMT
Report

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்திற்குள் கழுத்தில் கருப்பு ரிப்பன் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுலுக்கு சிறை

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.   

காங்கிரஸ் போராட்டம்

இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்திற்குள் கழுத்தில் கருப்பு ரிப்பன் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும், தஞ்சையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.