ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு
இந்தியா முழுவதும் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று வருகிறார்.
இந்த பயணத்தில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டார். இதில் வழக்கம் போல ராகுல் காந்தியின் பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதில் ஜலந்தர் மக்களவை தொகுதியின் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி கலந்து கொண்டார்.
அப்போது எம்பி சந்தோக் சிங் மயக்கமடைந்து கீழே விழுந்தார் பின்னர் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.