Viral Photo : லண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி...!
லண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லண்டனில் காங்.எம்.பி. ராகுல் காந்தி பேட்டி
லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நேற்று லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IJA) நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, இந்தியப் பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் பல்வேறு தலைப்புகளில் சிறந்த முறையில் உரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில்,
நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்ட அமலாக்கத்துறை அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மக்களின் குரலை பாஜகவினர் அடக்க முயற்சிக்கின்றனர் என்று அந்த கூட்ட நிகழ்ச்சியில் பேசினார்.
காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படங்கள் வருகிறது.
அந்த புகைப்படத்தில், நேற்று லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் குரு பசவண்ணா உருவச் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Rahul Gandhi paid tributes to great sons of Bharat , Mahatma Gandhi and Guru Basavanna early morning in London . pic.twitter.com/UJAwD0uFvn
— Ravi Kapur (@Kap57608111) March 6, 2023