“பல ஆயிரம் மைல்கள் நடப்பேன்”; சிறுமியை கையில் தூக்கி மகிழ்ந்த எம்.பி. ராகுல்காந்தி
“பல ஆயிரம் மைல்கள் நடப்பேன்” என்று குறிப்பிட்டு, எம்.பி. ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், தன் டுவிட்டர் பக்கத்தில் எம்.பி.ராகுல்காந்தி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் நடை பயணத்தின்போது சிறுமியை கையில் தூக்கிய புகைப்படத்தை வெளியிட்டு, அந்தப் பதிவில், இப்படியொரு அற்புதமான தருணத்தில், என்னால் பல ஆயிரம் மைல்கள் நடக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#ProudOfYou @RahulGandhi #MyLeaderRahulGandhi
— Dr.Vijai Shanker Tiwari 🇮🇳 (@DrVijaiShanker2) September 29, 2022
💝🌹💖 pic.twitter.com/Q1r83TjWYA