இங்க இருந்த நாட்கள் அழகானது.. நான் பங்களாவை காலி செய்யுறேன் : ராகுல் காந்தி
அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல்காந்தி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் கைது
பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம், மேலும் ராகுல் காந்தி எம்பி பதவியும் நீக்கப்பட்டது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராகுல்காந்தி தகுதிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து ராகுல்காந்தி டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
நன்றி சொன்ன ராகுல்
இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல்காந்தி பதில் கடிதம் எழுதினார். அதில், கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் வசித்து வந்துள்ளேன்.
கடந்த காலங்களில் பல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது அதற்கு நன்றி , அரசு உத்தரவினை நான் மதிக்கின்றேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.