ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை : பதட்டத்தில் கட்சியினர்

Nationalist Congress Party Rahul Gandhi
By Irumporai Mar 23, 2023 06:48 AM GMT
Report

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 மோடி திருடன்

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலாற்றில் 2019 தேர்தல் பரப்புரையின் போது ராகுல்காந்தி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருப்பதாக கூறினார். ராகுலின் இந்த பேச்சுக்கு எதிராக குஜராத் பாஜக எம் எல் ஏ புர்னேஷ் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை : பதட்டத்தில் கட்சியினர் | Rahul Gandhi Guilty In Criminal Defamation Case

இந்த நிலையில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் படி பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

   2 ஆண்டுகள் சிறை

மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை அறிவிக்க பட்டபோது சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என கூறப்படுகின்றது.