என்னைய பேசவே விட மாட்டேங்குறாங்க .. அதானிக்குதான் மோடி சாதகமா இருப்பாரு : ராகுல்காந்தி கொந்தளிப்பு
லண்டணில் பேசியது குறித்து விளக்கமளிக்கம் கொடுக்க உள்ளதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ராகுல் விளக்கம்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி லண்டணில் நமது நாட்டை பற்றி தரக்குறைவாக பேசவில்லை அதானிக்கு சாதகமாக பிரதமர் மோடி எவ்வாறு செயல்படுகின்றார் என்பதையே கூறினேன் என ராகுல் கூறினார்.
எனக்கு பேச அனுமதி கொடுங்க
மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குறித்தும் அதானி குறித்தும் பேசியது அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் பே ச வாய்ப்பு கேட்டும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை, லண்டனில் நான் பேசியது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க உள்ளேன் .
மற்ற மத்திய அமைச்சர்களுக்கு பேச அனுமதி கொடுக்கும் நிலையில் தனக்கு பேச அனுமதி கொடுக்க வேண்டும் நாளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கிடைக்கும் என நம்புவதாக ராகுல் காந்தி கூறினார்.