பதிலளிக்க மாட்டார் - ஆனால் கடலுக்கு அடியில் சென்று விடுவார் - விளாசிய ராகுல்

Indian National Congress Rahul Gandhi BJP Narendra Modi Lok Sabha Election 2024
By Karthick Apr 16, 2024 06:10 PM GMT
Report

கேரளாவில் தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராகுல் காந்தி பிரச்சாரம்

10 ஆண்டு பாஜக ஆட்சிக்கு முடிவுக்கட்டும் வகையில், இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலத்தின் வயநாட்டில் போட்டியிடுகிறார்.

rahul-gandhi-campaign-in-kerala-wayanad

அங்கு கடந்த சில நாட்களாக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அப்போது அவர் பேசியது வருமாறு,

நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை மாற்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக முயன்று வருகிறது. ஆனால், அதனை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தீவிரம் காட்டி வருகின்றது.

கடலுக்கு அடியில்...

நாட்டில் இருக்கும் 5 அல்லது 6 மிக பெரிய பணக்காரர்களின் துருப்புசீட்டாக பிரதமர் மோடி இருக்கின்றார். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதுதான் பிரதமர் மோடியின் நோக்கம்.


அதனால்தான் சில சமயங்களில் கடலுக்கு அடியில் சென்று பூஜை செய்கிறார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவேன், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவேன் என்றெல்லாம் கூறுகிறார்.

rahul-gandhi-campaign-in-kerala-wayanad

கடைசி வரை விவசாயம், வேலையின்மை, விலையேற்றம் பற்றியெல்லாம் அவர் பேசப்போவதில்லை. பணக்காரர்களின் பேங்க் லோன்களை தள்ளுபடி செய்யவும், அவர்களை பாதுகாக்கவும் மட்டுமே இருக்கின்றார்.