இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு - இல்லத்திற்கு திரும்பிய ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்...!
இந்திய ஒற்றுமை பயணத்தை வெற்றிகரகமாக நிறைவுசெய்த ராகுல்காந்தி காந்தி டெல்லியில் உள்ள தன் இல்லத்திற்கு திரும்பினார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ராகுல்காந்தி. ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம், பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்பு கொடுத்தனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
பாத யாத்திரை நிறைவு
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்த நிலையில், நேற்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி உடனிருந்தனர்.
இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல்காந்தி இதுவரை 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்தார்.
மேலும், இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் 12 பொதுக்கூட்டங்கள், 13 செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தினார். 375க்கும் மேற்பட்டோருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
இல்லத்திற்கு திரும்பிய ராகுல்காந்தி
இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் உள்ள தன் இல்லத்திற்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவைலத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Supporters of Congress MP Rahul Gandhi welcome him as he arrives at his Delhi residence after the completion of the Bharat Jodo Yatra. pic.twitter.com/EWMX3vBGUn
— ANI (@ANI) January 31, 2023