திடீரென ஓடிவந்து கட்டிப்பிடிக்க முயன்ற நபர் - பதறிப்போன ராகுல்காந்தி - வைரலாகும் வீடியோ...!
திடீரென ஓடிவந்து கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் ராகுல்காந்தி பதறிப்போன வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.
ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வருகிறார்கள்.

திடீரென ஓடிவந்து கட்டிப்பிடிக்க முயன்ற நபர்
இந்நிலையில், இன்று பஞ்சாப், ஷியார்பூரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை நோக்கி திடீரென்று ஓடி வந்த இளைஞர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார். இதனால், சட்டென ராகுல்காந்தி பதறிப்போனார். உடனே, ராகுல்காந்தியுடன் கூடவந்த தொழிலாளர்களால் அந்த நபர் இழுத்துச் செல்லப்பட்டார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Punjab: A man tried to hug Congress MP Rahul Gandhi, during Bharat Jodo Yatra in Hoshiarpur, was later pulled away by workers.
— ANI (@ANI) January 17, 2023
(Source: Congress social media) pic.twitter.com/aybyojZ1ps