லட்சாதிபதியாகும் கோடிக்கணக்கான மக்கள் - ராகுல் காந்தியின் பிளான் இதுதான்!

Indian National Congress Rahul Gandhi India Jharkhand Lok Sabha Election 2024
By Jiyath May 07, 2024 12:00 PM GMT
Report

அரசியலமைப்பையே பாஜக அழிக்க நினைக்கிறது என்று எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி 

ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி. ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

லட்சாதிபதியாகும் கோடிக்கணக்கான மக்கள் - ராகுல் காந்தியின் பிளான் இதுதான்! | Rahul Gandhi Abodi Pm Modi And Bjp

அப்போது பேசிய அவர் "நமது நாட்டின் நீர், நிலம், காடு, ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி விரும்புகிறார். இது பழங்குடியினர், ஏழைகள், பின்தங்கியவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான தேர்தலாகும்.

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் - அன்பில் மகேஷ் உறுதி!

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் - அன்பில் மகேஷ் உறுதி!

லட்சாதிபதியாக்குவோம்

அரசியலமைப்பையே பாஜக அழிக்க நினைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம்.

லட்சாதிபதியாகும் கோடிக்கணக்கான மக்கள் - ராகுல் காந்தியின் பிளான் இதுதான்! | Rahul Gandhi Abodi Pm Modi And Bjp

டிப்ளமோ மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.