என்னுடன் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன்: ராகுல் டிராவிட்
பேச்சு என்னுடன் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பேன் என இந்திய கிரிககெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ESPN Cricinfo இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன்.
ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்றுவிட்டு விளையாடமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான விஷயம் என்று நான் நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார்.
மேலும் உள்நாட்டில் ரன்களை குவித்துவிட்டு வெளிநாட்டில் விளையாடாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் ஒருவரின் திறமை எப்படி தெரியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.