இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு...!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
ராகுல் டிராவிட் தற்காலிக ஓய்வு
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் பொறுப்பேற்க இருக்கிறார்.
VVS Laxman appointed India head coach for New Zealand tour, Dravid rested
— ANI Digital (@ani_digital) November 11, 2022
Read @ANI Story | https://t.co/rGizMDU75F#Indiacoach #RahulDravid #VVSLaxman #BCCI pic.twitter.com/RAxaCmqQYQ