கழுவி ஊத்துறது அவங்க வேலை என்ன ஆனாலும் என் அணிக்காக சிறப்பாக விளையாடுவேன்! ரஹானே அதிரடி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி குறித்து அஜிங்கிய ரஹானே பேசினார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது, கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடனே சொந்த விஷயம் காரணமாக நாடு திரும்பிய நிலையில், எஞ்சிய மூன்று போட்டிகளுக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக செயல்பட்டு, தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரராகவும் திகழ்கிறார். இப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட ரஹானே இன்னும் பல விமர்சனங்களை எதிர்கொண்டுதான் வருகிறார்.
இவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால், அடுத்து சில போட்டிகளில் சிறப்பாக சோபிப்பது கிடையாது. இவரது பேட்டிங் டெக்னிங் சரியில்லை போன்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதற்கு பதிலளித்துப் பேசிய ரஹானே, “விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது.
என்னைச் சிலர் விமர்சிக்கலாம். அது அவர்களது வேலை. அவர்களை என்னால் தடுக்க முடியாது. நான் எப்போதுமே இந்திய அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
என்னை விமர்சிப்பது நல்லதுதான். அதனால்தான் பெரிய அளவில் பிரபலமாகி வருகிறேன். இது மகிழ்ச்சியான விஷயம்தான். யார் என்னை விமர்சித்தாலும், விமர்சிக்காவிட்டாலும் இந்திய அணிக்காகத் தொடர்ந்து பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாக விளையாடுவேன். இதுதான் என்னுடைய வேலை எனக் கூறினார்.