மொத்த இந்தியாவும் என் வீடு தான் - ராகுல் காந்தி
எம்.பி பதவி திரும்ப கிடைத்துள்ள நிலையில், முன்னர் குடியிருந்த பங்களாவே கிடைக்குமா என கேள்வி கேட்டபோது, மொத்த நாடும் என் வீடு தான் என ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
தகுதி நீக்கம்
மோடி குறித்து 2019 பொது தேர்தலின் போது அவதூறாக பேசினார் என தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிப்பட்டு அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், குஜராத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.
மீண்டும் எம்.பியானார்
இந்த வழக்கில் குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். அதன் அடிப்படையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு எம்.பியாக மீண்டும் பிரவேசித்தார் ராகுல் காந்தி.
இந்நிலையில் இன்று அவரிடம் செய்தியாளர்கள், மீண்டும் எம்.பியாகியுள்ள நிலையில், முன்னர் தங்கியிருந்த அதே பங்களா ஒதுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாடு முழுவதும் ந்தியா முழுவதும் என் வீடுதான் என்று கூறினார்.