மணிப்பூர் எரிகிறது...நாடாளுமன்றத்தில் மோடி சிரிக்கிறார் - ராகுல் காந்தி ஆவேசம்

Rahul Gandhi BJP Narendra Modi
By Karthick Aug 12, 2023 05:37 AM GMT
Report

மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் போது, அதனை விடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் வேறு விஷயங்களை பேசியிருக்கிறார் என காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி உரை

ragul-gandhi-on-modi-statement-in-parliament

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த நிலையில், அதக்ரு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக மீது கடுமையான கண்டங்களை தெரிவித்து பேசியிருந்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த போதிலும், தனது உரையில் பிரதமர் மணிப்பூர் கலவரம் குறித்து பெரிதாக கருத்துக்களை தெரிவிக்கவிலை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சிரிக்கும் பிரதமர்

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதை கேட்டதாக குறிப்பிட்டு, பிரதமர் நகைச்சுவையாக பேசி, சிரிக்கிறார் என்றும் அதற்கு ஆதரவாக ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் கோஷம் எழுப்புகின்றனர் என் விமர்சனம் செய்தார்.

ragul-gandhi-on-modi-statement-in-parliament

மணிப்பூர் மாநிலம் பல நாட்களாக தீப்பற்றி எரிவதை பிரதமர் மறந்துவிட்டார் போலும் என குறிப்பிட்ட ராகுல், நாடாளுமன்றத்தின் நடுவில் அமர்ந்திருந்த பிரதமர் வெட்கமின்றி சிரித்துக்கொண்டிருந்தார் என காட்டமாக விமர்சித்தார்.

ragul-gandhi-on-modi-statement-in-parliament

மணிப்பூரில் என்னநடக்கிறது, அவை ஏன் தடுக்கப்படவில்லை என்பதே பிரச்சினை. மணிப்பூர் தீப்பற்றி எரிய பிரதமர் விரும்புகிறார். தீயை அணைக்க அவர் விரும்பவில்லை என கூறினார்.