சின்மயின் ”முத்த மழை” பாடல்; கொண்டாடும் ரசிகர்கள் - கடுப்பான ராதா ரவி!
சின்மயிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ராதா ரவி விளக்கமளித்துள்ளார்.
சின்மயிக்கு தடை
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் பலரையும் கட்டிப்போட்டது. தொடர்ந்து சின்மயி தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை காலம் பாடவில்லை, அவரை பாட கூடாது என தடை விதித்தது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள, டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவரான ராதா ரவி, சின்மயி ஆண்டு சந்தா கட்டவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அங்கே சென்று நான் வாழ் நாள் முழுக்க சந்தாவை கட்டிவிட்டேன் என பொய் சொன்னார்.
ராதா ரவி காட்டம்
இதனால், தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்றார். தொடர்ந்து நீங்கள் ஒரு மூத்த நடிகர், சின்ன பெண் சின்மயி, ஏதோ தவறு செய்துவிட்டார். அவரை அழைத்து, எதற்கு தேவையே இல்லாத பிரச்சனை சந்தா கட்டு என்று சொல்லி இருக்கலாம், அதை விட்டு விட்டு என் பேச்சை கேட்கவில்லை என்றால்,
வாழவே முடியாது என்று ஒருவரின் திறமையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்விக்கு, நீங்கள் நன்றாக கேள்வி கேட்கிறீர்கள், நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால், இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏன் என்றால் இது ஒரு தேவையில்லாத 'வேஸ்ட் டாப்பிக்' இதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.