குழந்தை அமைப்பு இருக்கானு தெரியாது! பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரக்ஷிதா

Bigg Boss Serials Rachitha Mahalakshmi
By Thahir Dec 21, 2022 11:00 AM GMT
Report

சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா. கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தான் பிரபலமானார்.

அறிமுகம் - திருமணம் 

இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத்தொடங்கியது. பின்னர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். இவருக்கு சின்னத்திரையில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

rachitha-mahalakshmi-crying-bigg-boss-house

ரக்ஷிதாவுக்கும், சீரியல் நடிகர் தினேஷிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ரக்ஷிதா அமைதியாக இருந்தாலும் காரியங்களை சாதுர்யமாக செய்து வருகிறார்.

கொடுக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாட்டை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் போட்டி சூடு பிடித்துள்ளது.

கதறி அழுத ரக்ஷிதா

இந்த வார டாஸ்காக மழலையர் மற்றும் உயர் கல்வி குறித்தான பஃர்ன் விளையாட்டாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 10 போட்டியாளர்களும் தங்களுடைய உறவுகள் குறித்து கண்ணீர் மல்க பேசி வருகின்றனர்.

rachitha-mahalakshmi-crying-bigg-boss-house

அதில் ரக்ஷிதா கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. அதில் ரக்ஷிதா அந்த கடவுள் கிட்ட கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னு தான். எனக்கு இதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று சத்தியமா எனக்கு தெரியாது. ஆனால் குழந்தை அமைப்பு இருக்கானு கூட தெரியாது.

rachitha-mahalakshmi-crying-bigg-boss-house

என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த குழந்தையை என் கூட கடவுள் கடைசி வரை கொடுக்கனும். அந்த குழந்தையை நல்லபடியா பாத்துக்கனும். இதுக்கு அப்புறம் எனக்கு நீ...உனக்கு நான்.. என்று வாழ ரெடியா இருக்கேன் அம்மா என்று கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.