மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்து பேசினார். 6 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.அப்போது தமிழகத்தின் நிலவரங்கள் குறித்து பிரதமர் ஆளுநருடன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமரை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்த பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்துத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.