தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து குயின்டன் டி காக் திடீர் விலகல் - என்ன காரணம்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து குயின்டன் டி காக் விலகினார்.
தென் ஆப்பிரிக்கா அணி தனது சொந்தமண்ணில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
முதல் டெஸ்ட் வரும் டிச. 26ல் செஞ்சுரியனில் நடக்கவுள்ளது.இதற்கான தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் கீப்பராக குயின்டன் டி காக் இடம் பெற்றிருந்தார்.
இதனிடையே குயின்டன் டி காக் மனைவி சாஷாவுக்கு 28, புத்தாண்டு துவக்கத்தில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது.
இதற்காக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து குயின்டன் டி காக் வெளியேறினால், மீண்டும் உடனடியாக இணைவதில் சிக்கல் ஏற்படும்.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக கடைசி இரு டெஸ்டில் இருந்து குயின்டன் டி காக் விலகிக் கொள்ளவுள்ளார்.
இவருக்குப் பதில் கைல் வெரேன், ரியான் ரிக்கிள்டன் என இருவரில் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக களமிறங்க உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க தேர்வுக்குழுத் தலைவர் விக்டர் பிட்சாங் கூறுகையில், ''மனைவி பிரசவத்திற்குச் செல்வதால், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் குயின்டன் டி காக் பங்கேற்க மாட்டார்,'' என்றார்.