ராணிகளுக்கு இரும்பு உள்ளாடைகள்..மன்னர் காலத்தில் மிரளவைக்கும் நிகழ்வுகள் -பின்னணி என்ன?
மன்னர் காலத்தில் ராணிகள் இரும்பு உள்ளாடைகள் அணிந்து கொண்டதன் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராணிகள்
உலகின் பல்வேறு நாடுகளில் மன்னர்கள் மற்றும் பேரரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் அதில் சில நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மேலும் திரைப்படங்களில் மன்னர்கள் மற்றும் மகாராஜாக்கள் அனைவரும் ஆடம்பரமான வாழ்க்கையின் காட்சிகளை நாம் இருக்கிறோம்.
ஆனால் அந்த காலகட்டத்தில் அவர்களது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு அடிக்கடி மனதில் எழும். மன்னர்களும் பேரரசர்களும் போருக்கோ அல்லது வெளி பிரயாணம் செல்லும் போது, தங்கள் ராணிகளுக்கு இரும்பினால் ஆன பூட்டு சாவியுடன் கூடிய உள்ளாடைகளை அணிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்குக் காரணம் தன்னுடைய மனைவி வேறு ஒருவரின் துரோக செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவாம். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைராகி வருகிறது. அதில் @desijourneyofficial என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் பெண்களுக்காகத் தயாரிக்கப்பட்ட இரும்பு உள்ளாடைகளைக் காட்டுகிறார்.
இரும்பு உள்ளாடை
இது 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது தங்கள் ராணிகளை நம்பாத அந்த மன்னர்கள், அவர்களைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவதாக அந்த நபர் வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபரின் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை .
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இருப்பினும், இந்த வீடியோவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைத் IBC தமிழ்நாடு உறுதிப்படுத்தவில்லை.